வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் து.மு.கதிர் ஆனந்த் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் சேரி, அக்ரஹாரம், அகரம் குருவராஜ பாளையம், ராமநாயினி குப்பம் அரிமலை, சின்ன பள்ளிகுப்பம், ஆசனாம்பட்டு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுதாகர், சேர்பாடி பிரகாஷ் ஹரி, நந்தினி வினோத்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.