குடியாத்தம், ஏப்.8- வேலூர் மக்களவைத் தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் து.மு.கதிர்ஆனந்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் பி.காத்தவராயன் தலைமை தாங்கினார் தாலுகா செயலாளர் எஸ்.சிலம்பரசன் முன்னிலை வகித்தார் பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் சி. சரவணன் வர வேற்புரையாற்றினர். சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் கதிர்ஆனந்தை ஆதரித்து பேசுகையில், மோடியின் கடந்த 10ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி 6.5 என்ற அளவி லிருந்து 3.2 என்ற நிலைக்கு சென்றுள்ளது. தொழிலும் விவ சாயமும் கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி என்ற கொடூரமான வரிவிதிப்பு முறை யால் குடியாத்தம் நகரில் கைத்தறி தொழில், பீடி, தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நசிந்து நாசமாகின. இது என்ன சரத்குமார் கட்சியா? தமிழகத்தில் சிற்றுண்டி திட்டம், இலவச பேருந்து , கல்வி உதவி, உரிமைத்தொகை என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்தால் அதை செயல்படுத்த ஒன்றிய அரசு நிதியை தர மறுக்கிறது. நிதியை முடக்க பார்க்கிறது அதன் மூலமாக அரசை திணற வைக்க முயற்சி செய்கிறது. இதே போன்று அவர்கள் ஆட்சியில் இல்லாத கேரளா, தில்லி போன்ற மாநிலங்களுக்கு நிதியை கொடுக்க மறுக்கின்றனர். எனவே மக்கள் விரோத பாஜகவுக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதை விட, ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டால் தொழிலாளர் விரோத, விவசாயி கள் விரோத சட்டங்களை தூக்கி எறிந்து விடலாம். எதை வேண்டுமானாலும் நாம் இழக்கலாம், நமது உரிமைகளை இழக்கக்கூடாது. வரும் தேர்தலில் மோடி அரசை, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொன்று சவப் பெட்டியில் போட்டு பெரிய பலகை போட்டு ஆணி அடிக்க வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் 300 ஆணியையாவது நாம் அடிக்க வேண்டும். அதில் முதலாவது அணியாக வேலூர் தொகுதி யிலிருந்து கதிர் ஆனந்த் என்று இருக்க வேண்டும் என்றார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ் தயாநிதி, குடியாத்தம் நகர மன்ற தலைவரும் திமுக நகர செயலாளருமான எஸ். சௌந்த ரராஜன் கலந்துகொண்டு பேசினர். இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஜி.எஸ்.அரசு, காங்கிரஸ் நகர தலைவர் கே.விஜயன், மதிமுக செயலாளர் ஆட்டோ.மோகன் சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் துரை.செல்வம், திக மாவட்ட செயலாளர் சடகோபன், விசிக நகர செய லாளர் உத்தமன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. சாமிநாதன், எம். இந்துமதி, செ. ஏகலைவன் மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.