திருவண்ணாமலை, டிச. 22- திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு கருணா கடந்த ஆண்டு டிசம்பர் 21 உடல்நலக்குறைவு காரண மாக உயிரிழந்தார். அவரது உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆராய்ச்சிக்காக ஒப்ப டைக்கப்பட்டது. இதையடுத்து கருப்பு கருணாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் தமுஎகச வின் மாவட்ட செயலாளர் மு.பாலாஜி தலைமையில் நடைபெற்றது. செந்தில்குமார் வர வேற்றார், கருப்பு கருணா வின் நினைவுகளை ஒருங்கி ணைத்து எழுதப்பட்ட, “ வர முடிந்தால் வந்து விடுங்கள் தோழர்” என்ற புத்தகத்தை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வெளியிட, புத்தகத்தை தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா , சி.காளிதாஸ், மா.சாமிநாதன், சுரேந்திரன், டாக்டர் தேவ் ஆனந்த்,சி.சோமு, மா.ரேணுகோபால் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் நாடகவியலாளர் பிரளயன், தமுஎகச துணை பொதுச் செயலாளர்கள் களப்பிரன், லட்சுமிகாந்தன், மாநில பொருளாளர் சு.ராமச் சந்திரன், எழுத்தாளர் போப்பு, பாரதி புத்த காலயம் சிராஜூதீன், ஓவியக் கவிஞர் வெண்புறா, மாநில துணைச் செயலாளர் கி.அன்பரசு, கலை இலக்கிய பெருமன்றம் பெ.அன்பு மற்றும் தமுஎகச மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மா.பரிதிமாற்கலைஞர் நன்றி கூறினார்.