திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.