தத்துவ மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை சிபிஎம் அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப. செல்வன், எஸ். ராமதாஸ், ஏ. லட்சுமணன், ஒன்றிய நிர்வாகிகள் பன்னீர், சத்யா, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.