சென்னை, ஏப். 9- ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என நாட்டின் பன்முகத்தன்மையை பாஜக சிதைக்கிறது என கொளத்தூரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார். வடசென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலா நிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூ ரில் பகுதிச் செயலாளர் ஏ.நாகராஜன் தலைமையில் திங்களன்று (ஏப். 8) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திமுகவின் துணை பொதுச் செயலர் கனிமொழி கலந்து கொண்டு பேசுகையில், நடை பெறும் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல். ஒன்றிய அரசை பார்த்து கேள்வி கேட்க வேண்டிய எடப்பாடி பழனிச்சாமி, இது ஒரு சட்டமன்ற தேர்தல் என்பது போல், தொடர்ந்து திமுகவை குற்றம் சாட்டி வருகிறார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பதிலளித்து வருகிறோம். அவர், கொளத்துார் தொகுதியில் பிரசாரம் செய்த போது, கொளத்துார் தொகுதிக்கு ஸ்டாலின் எதுவும் செய்ய வில்லை என்கிறார். அவர் இந்த தொகுதிக்கு முதல்வர் ஆன பின், மூன்று ஆண்டுகளில் 52 முறை வந்துள்ளார். அவர் எவ்வளவு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பது இந்த தொகுதி மக்களுக்கு தெரியும். இதுவரை எடப்பாடி பழனிச்சாமி மோடியை பற்றி ஏதாவது ஒரு வார்த்தை பேசி ஓட்டு கேட்டுள்ளாரா? அவருக்கு மோடி, அமித்ஷாவை பார்த்தால் பயம். சசிகலாவை பார்த்தாலும் பயம். அதனால் தான் அவர் பா.ஜ.கவினரை விமர்சனம் செய்யவில்லை. சிஏஏ, புதிய வேளாண் சட்டங்கள், தொழிலாளர் விரோத சட்டங்கள் என அனைத்திற்கும் ஆதரவு அளித்தது அதிமுக. எனவே இந்த தேர்தலில் பொதுமக்கள் நிச்சயம் அதிமுகவுக்கு தக்கபாடம் புகட்டுவார்கள். வட மாநிலங்களிலும் பாஜகவின் தோல்வி உறுதியாகி விட்டதால், தமிழ்நாட்டை நோக்கி பிரதமர் உட்பட பாஜக தலைவர்கள் வந்து கொண்டி ருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சிக் கிறார்கள். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு பணம் வழங்க மறுக்கி றது. 2ஆவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத் திற்கு தமிழ்நாடு அரசு 12 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் மெட்ரோ ரயில் ஒன்றிய அரசின் திட்டம் என மார் தட்டிக் கொள்கிறார்கள். மோடி அரசு ஏழை மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யவில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளார். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் வரும் காலங்களில் தேர்தல் இருக் காது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் எனக் கூறி இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து விடு வார்கள். எனவே ஜனநாயகத்தை, அரசி யல் சாசனத்தை, பன்முகத்தன்மையை பாதுகாக்க இந்தியா கூட்டணி வேட்பா ளர் கலாநிதி வீராமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முனைவர் சபாபதி மோகன், பேச்சா ளர் கரூர் முரளி, திமுக பகுதிச் செய லாளர் வ.முரளிதரன், முன்னாள் எம்.எல்.ஏ. பா.ரங்கநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எல்.சுந்தரராஜன், பகுதிச் செய லாளர் பா.ஹேமாவதி, நிர்வாகிகள் அயூப்கான், கோடீஸ்வரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, சிபிஐ மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, மதிமுக பகுதிச் செயலாளர் ஞானம், விசிக மாவட்டச் செயலாளர் அப்புன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.