காஞ்சிபுரம் மக்களவைத் (தனி ) தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக் குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணாவை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திமுக நகர செயலாளர் நரேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி,அரி கிருஷ்ணன், க.புருஷோத்தமன், பகத்சிங் தாஸ், கலைச்செல்வி பகுதி செயலாளர்கள் கே.வேலன், எஸ்.ரவி, எம்.குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.