districts

img

நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட பட்டு

நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  காஞ்சிபுரம் கைத்தறி துறை அலுவலகம்  எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜி.லட்சுமிபதி தலைமையில் கைத்தறி சம்மேளன தலைவர் இ.முத்துக்குமார், சங்க நிர்வாகிகள் கே.ஜீவா, ஜி.வசந்தா, ஜி.எஸ்.வெங்கடேசன், எம்.வெங்கடேசன், சந்திரன், மாணிக்கம்,  சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர் ஆகியார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக கைத்தறி துணை இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டது.