காஞ்சிபுரம், ஆக.16 - தொடர் மழை காரணமாக சேதம் அடைந்த நெற்பயிர்களை விவசாயிகளின் வயல்களுக்கு நேரில் சென்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்யும் தொடர் கன மழை காரணமாக விவசாய நிலங்கள் சுமார் 500 ஏக்கருக்கு மேல் சேத மடைந்துள்ளதாகவும், அதற்கு மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டக் குழு வேண்டுகோள் விடுத்திருந்தது. பயிர் சேதங்கள் அதிகமாக இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் கோரிக்கைகளை தெரிவித்த னர். அதனைத் தொடர்ந்து வயலக்காவூரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி நேரில் சென்று அப்பகுதியில் ஏற்பட் டுள்ள பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நேரில் ஆய்வு செய்த பின்னர் அவர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்துக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்ததை தொடர்ந்து விவசாயிகள் ஆறுதல் அடைந்த னர்.