காஞ்சிபுரம், வந்தவாசி சாலையில், கூட்டுறவு துறை சார்பில், கோடை காலத்தில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பந்தலை வியாழனன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு பொதுமக்கள் , சிறுவர்களுக்கு பழங்கள் மற்றும் மோர் ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்தார். கடும் கோடை நேரத்தில் பழங்கள், மோர் வழங்கப்பட்டதால் சாலையில் சென்ற அனைத்து தரப்பினரும் இதனைப் பெற்று தங்கள் உடல் வெப்பத்தை குறைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் முருகன் , சத்யநாராயணா, முரளி என பலர் கலந்து கொண்டனர்.