கள்ளக்குறிச்சி, மார்ச் 20- கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியானது தமிழ்நாட்டில் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 14வது நாடாளுமன்ற தொகுதி ஆகும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் 13லட்சத்து 90 ஆயிரத்து 175 இதில் ஆண்கள் 6 லட்சத்து 96 ஆயிரத்து 421,பெண்கள் 6லட்சத்து 93ஆயிரத்து 173, மூன்றாம் பாலினத்த வர் 131. கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதி கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், ஆத்தூர்,கெங்கவல்லி,ஏற்காடு சேலம் மாவட்டத்திலும் ஆகிய தொகுதியில் உள்ளடக்கியது. இதில் 2009 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் ஆதிசங்கர் வெற்றி பெற்றார். 16வது மக்களவைத் தேர்தலில் அதிமுக காமராஜ் வெற்றி பெற்றார். 17 வது மக்களவைத் தேர்தலில் திமுக பொன் கௌதமசிகாமணி வெற்றி பெற்றார்.
புதிய தொழிற்சாலைகள்
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் விவசாயத்தை சார்ந்துள்ள தொகுதியாக கள்ளக்குறிச்சி உள்ளது. வேளாண்மையின் வீடு என்று அழைக்கப்படும் இத்தொகுதியில் சிறிய மற்றும் பெரிய 10க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இங்கு 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1 தனியார் சர்க்கரை ஆலை, 1 கரைப்பான் பிரித்தெடுக்கும் ஆலை உள்ளது. புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களினுடைய நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது கல்வராயன் மலைப்பகுதியில் விளையக்கூடிய கடுக்காய் கொட்டை களை பயன்படுத்தி புதிய நவீன தொழிற்சாலைகளை உருவாக்கித் தர வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன் மலை 550.7ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் கல்வராயன் மலையில் பெரியார் நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் பகுதியாக உள்ளது. கள்ளக் குறிச்சி மாவட்ட நிர்வாகம் ஆண்டு தோறும் கோடை விழாவினை இம்மலைப் பகுதியில் நடத்தி வரு கின்றது. வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகள் கொண்ட கல்வராயன் மலையை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும், கல்வரா யன் மலையில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அவர்களுடைய அனுபவ நிலத்தை வன உரிமைச் சட்டம் 2005 இன் படி அனுபவ நிலம் 10 ஏக்கர் வரை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது ஒரு பகுதியினருக்கு மட்டும் பட்டா கிடைத்துள்ளது. இம்மாவட்டத்தின் அடையாளமாக கோமுகி அணை, நீர் தேக்கி வைக்கும் காலங்களில் அணை பகுதியில் படகுச் சவாரி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக் கின்றது, கல்வராயன் மலைப் பகுதி களில் பெய்யும் மழை நீர் முழுவதும் கல்படை, பெட்டியம், மளிகைபாடி, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணையை வந்தடைகின்றது. 360 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்ட இந்த அணை யின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள் 2,024,29 ஹெக்டேர் பாசன வசதி பெறுகிறது,
ரிஷிவந்தியம் பகுதியில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில், சங்கராபுரம் பகுதியில் தேவாரம் பாடப்பட்ட திருத்தலம் தேவபாண்டலத்தில் மிகவும் பழமை யான கோவில் அமைந்துள்ளது சேலம் மாவட்டத்தில் அமைந் துள்ள ஆத்தூர் தொகுதியில் விவசா யம் கால்நடை வளர்ப்பு மற்றும் மஞ்சள், வெற்றிலை சாகுபடி செய்யப் படுகிறது. இது தவிர பாக்கு மர வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஜவ்வரிசி உற்பத்தியில் மாவட்ட அளவில் முதலிடம் வகிக் கின்றது. மரவள்ளி அரவை ஆலைக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என பகுதி மக்கள் தெரிவித்தனர். சின்னாளம் பட்டியில் உலகப் புகழ்பெற்ற சுங்குடி சேலை உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஆனால் நெசவாளர்களுக்கு நூல் விலை ஏற்றம் ஜிஎஸ்டி வரி போன்றவைகளால் தொழில் மிகவும் நலிவடைந்து தொழில் கைவிடும் சூழலில் உள்ளது என நெசவாளர்களின் வேதனையாக உள்ளது. ஆத்தூரில் அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது. கங்கவல்லி பகுதியில் விவசாயம் மற்றும் கூலித்தொழில் பிரதான தொழி லாக உள்ளது. கரும்பு, நெல், மரவள்ளி, நுட்பாலை, ஜவ்வரிசி ஆலைகள் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கி றது. ஏற்காடு இயற்கை எழில் கொஞ் சம் மலைகளைச் சூழ்ந்த பகுதியாக உள்ளது. கோடை வாசஸ்தலமான சேர்வராயன் மலை, ஏற்காடு சேர்வராயன் கிராமங்களில் காப்பி, மிளகு தோட்டங்கள் நிறைந்து காணப்படுகிறது. விவசாயம் பிரதான தொழில் என்பதால் இப்பகுதியில் காய்கறிகளை பதப்படுத்தும் கிடங்கு அல்லது தொழிற்சாலையை அமைத்து தர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. கல்வராயன் மலை அடிவாரம் பாப்ப நாயக்கன்பட்டியில் கரிய கோவில் அணையில் சிறுவர் பூங்கா மற்றும் தங்கும் விடுதி, படகு துறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத்தல மாக தரம் உயர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாக உள்ளது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுகவின் பலம் வாய்ந்த தொகுதியாக கருதப்படுவதால் இந்த முறையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வெற்றி உறுதியாகிவிட்டது.
- ஜெ. சசிக்குமார்