districts

கள்ளக்குறிச்சி நீலமங்கலம் ஏகேடி பள்ளி மாணவர்கள் சாதனை

கள்ளக்குறிச்சி, மே 21-

     கள்ளக்குறிச்சி நீலமங்கலம் ஏகேடி பள்ளி பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்  எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

    இது குறித்து பள்ளியின் நிர்வாக இயக்கு நர் ராஜேந்திரன் கூறுகையில், மாணவ, மாணவியரின் கல்வி தரத்தை உயர்த்து வதில் மூலமே அவர்களின் எதிர்கால வாழ்க்கை அடங்கியுள்ளது என்பதை முழுமையாக உணர்ந்துள்ளோம்.

   அதன் காரணமாக. ஆசிரியர்கள் கல்வி கற்றலை உயரிய நோக்கத்துடன் செயலாற்றி வரு கின்றனர்.மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி காரணமாக பொது தேர்வில் இப்பள்ளி சாதனை படைத்து வருகிறது.

   இந்த கல்வியாண்டிலும் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது. மாணவர் சந்தோஷ் 500க்கு 491 மதிப் பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடம் படித்துள் ளார். இவர் தமிழ் 97, ஆங்கிலம் 98, கணிதம் 99, அறிவியல் 99, சமூக அறிவியல்  98, மதிப்பெண் எடுத்துள்ளார். மாணவி பிரியதர்ஷினி 490 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் தமிழ் 97, ஆங்கிலம் 97, கணிதம் 99, அறிவியல் 99, சமூக அறிவியல் 98, மதிப் பெண் எடுத்துள்ளார். மாணவிகள் சிந்துஜா,  பிரியதர்ஷினி ஆகியோர் 488 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

   மேலும் கணிதம் பாடத்தில் 7 பேர். அறிவியல் பாடத்தில் 3 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.   490க்கு மேல் 2 பேர், 480 க்கு மேல் 18  பேர், 470க்கு மேல் 39 பேர், 450க்கு மேல் 98 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு 98 ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

   தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன், செயலாளராக லட்சுமி பிரியா, பள்ளியின் முதல்வர்கள் வெங்கட்ரமணன்,சுமதி ஆகியோர் பாராட்டினர்.