ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எம்.வி.ஏழுமலை தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. எம்.ஜெய்சங்கர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.