districts

img

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படகண்காட்சி

கள்ளக்குறிச்சி,பிப்.17- கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள்,நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள் புதனன்று (பிப்.14) ஆர்வமுடன் பார்வையிட்டனர். தமிழ்நாடு அரசின் சாதனைகள்,நலத்திட்டங்களை தெரிந்து கொள்வதற்காக கச்சிராயப்பாளையம் பேருந்துநிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படதொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டன. இப்புகைப்பட கண்காட்சியில்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள்குறித்த புகைப்பட தொகுப்புகளை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்படதொகுப்புகளையும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.