districts

img

கைத்தறியை ஆதரிக்க கள்ளக்குறிச்சி ஆட்சியர் அழைப்பு

கள்ளக்குறிச்சி, அக்.14- கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு ஊழியர்கள் கைத்தறியை ஆதரித்து உதவி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் கேட்டுக் கொண்டார். கள்ளக்குறிச்சி கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அக்.14 அன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய துணி ரகங்களை நாடு முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை புதிய வடிவமைப்புகள் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் வழங்கி வருகிறது”என்றார்.  இந்த நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுப்பிரமணியன், நிலைய விற்பனை மேலாளர் மகாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.