districts

img

காலடிப்பேட்டை மார்கெட் கடைகள் நள்ளிரவில் அகற்றம்

சென்னை, ஜூலை 30- திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் காய்கறி, மளிகை, குளிர்பான கடைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் சாலையோரம்  பழக்கடை, காய்கறி உள்ளிட்ட பல் வேறு கடைகள் அமைத்தும் ஏராள மானோர் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் மார்க்கெட் சாலை, சன்னதிதெரு எப்போதும் பரபரப்பாக  காணப்படும் இந்நிலையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடை களால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாக  மாநகராட்சி அதி காரிகளுக்கு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி  திங்களன்று நள்ளிரவு 2 மணி அளவில் மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி எநந்திரத்துடன் காலடிப்பேட்டை மார்க்கெட்டுக்கு வந்தனர். அவர்கள் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். மேலும் விதிமுறைகளை மீறி  இருந்த கடைகளின் பெயர் பலகைகள்,  கடை வாசலில் இருந்த சிறிய விளம்பர  பதாகைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் அகற்றப்பட்ட கடையில் இருந்த பொருட்களை எடுத்து செல்லா மல் அப்படியே சாலையில் போட்டு சென்றனர். நள்ளிரவில் கடைகள் அகற்றப்பட்டதால் இதுபற்றி வியாபாரி களுக்கு தெரியவில்லை. செவ்வாயன்று அதிகாலை வழக்கம் போல் வியாபாரம் செய்வதற்காக வியாபாரிகள் வந்தனர். அப்போது மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு அப்பகுதியே அலங்கோலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர். சாலையோர வியாபாரிகள் சிலர் தங்களது கடைகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டதை கண்டு கண்ணீர் வடித்தனர். ஏராளமான வியா பாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மாநகராட்சி அதிகாரி களின் இந்த நடவடிக்கையை கண்டித்து மறியலில் ஈடுபடமுயன்றனர். அவர்களி டம் மண்டல குழு தலைவர் தி.மு.தனி யரசு மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வியாபாரி கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, `ஆக்கிரமிப்பு கடைகள்  அகற்றப்படுவது குறித்து மாநகராட்சி  அதிகாரிகள் எதுவும் தெரிவிக்க வில்லை. அவர்கள் நள்ளிரவில் வந்து   சன்னதிதெருவில் உள்ள பெரும் பாலான கடைகளின் முகப்பை இடித்துள்ளனர். இதில் கடைகள் முன்பு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ஏராளமான கண்காணிப்பு காமிராக்கள்  உடைக்கப்பட்டுள்ளன. காலையில் வியாபாரம் செய்ய வந்த பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.