வடசென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பெரம்பூர் 35ஆவது வட்டத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், வழக்கறிஞர் சரவணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கோடீஸ்வரி, எம்.ராஜ்குமார், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் கு.வேம்புலி வெங்கடேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.