சங்கராபுரம், செப்.5- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகாவை சமீபத்தில் தமிழ்நாடு அரசு இரண்டாக பிரித்து புதிதாக வாணாபுரம் தாலுகாவை அறிவித்துள்ளது. இதில் உள்ள முரண்பாடுகளை கலளந்து சங்கரா புரத்திற்கு அருகில் உள்ள மூங்கில் துறைப்பட்டு, புதுப்பட்டு, வடபொன்பரப்பி உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் சங்கரா புரத்தில் இணைத்து அப்பகுதி மக்கள் வாணாபுரம் சென்று வருவதில் உள்ள சிரமங்களை நீக்க வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே சங்கராபுரம் அனைத்து வியா பாரிகள் சங்கம் மற்றும் பொது சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுமக்கள் நலன் வேண்டி வாணாபுரம் தாலுகாவை மறு வரையறை செய்து வடபொன்பரப்பி பிர்க்காவை மீண்டும் சங்கராபுரம் தாலுகாவுடன் சேர்க்க வேண்டி அரசின் கவனத்திற்கு கொண்டு வர பொதுமக்கள் ஆதரவுடன் செப். 5 அன்று சங்கராபுரத்தில் முழு கடை அடைப்பு, சாலை மறியல் நடத்த முடிவு செய்தனர். அதன்படி சங்கராபுரத்தில் உள்ள பொது சேவை அமைப்புகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து முழு கடையடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.