சென்னை விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்த போராட்டத்தில் மக்களை அணிதிரட்டிய கே.பரமேஸ்வரி, அவரது மகள்கள் கே.பிரியா - கே.பூர்ணிமா ஆகியோரின் 16வது ஆண்டு நினைவு தினம் திங்களன்று (ஜன.22) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பொழிச்சலூரில் அவரது நினைவு இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு, எஸ்.ஜெயசங்கரன், கிளைச் செயலாளர் ராமு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.