கிருஷ்ணகிரி,ஏப்.4- ஓசூர் சிப்காட் பகுதி தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் ஐஎன்டியூசிஅகில இந்திய செயலாளர் கே.ஏ. மனோ கரன் தலைமையில் ஓசூரில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் தேர்தல் குழு பொறுப்பாளரான ஈரோடு கோபிநாத் முன்னிலை வகித்தார். ஓசூருக்கு எந்த திட்டங் களையும் செயல்படுத்தாத ஒன்றிய பாஜக அரசு இப்பகுதியில் தொழிற் சாலைகளில் ரூ.33,000 கோடி ஜிஎஸ்டியை வாரி சுருட்டி எடுத்து சென்றுள்ளது. 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டமாக சுறுக்கியுள்ளது. தொழிலா ளர் விரோத பாஜக ஒன்றிய அரசு தொழிலாளர்களுக்கும் தொழில் முனைவோர் களுக்கும் எந்த நல திட்டங் களையும் அமல்படுத்த வில்லை.கடந்த 10 ஆண்டு களாக தேச ஒற்றுமையை சீர்குலைத்து, மத மோதல் களை அதிகப்படுத்தி, மாநில உரிமைகளை சிதைத்துள்ள பாஜக மோடி அரசை தோற்கடிக்கவும்,ஓசூரில் பாஜக, அதிமுக அணிகளை தோற்கடிக்கவும் காங்கி ரஸ் வேட்பாளர் கே.கோபி நாத்திற்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு தொழிற் சங்கம் சார்பில் தீவிர பிரச்சா ரம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.