விடுதலைப் போட் டத்தில் ஈடுபட்டு தென்னாட்டு ஜான்சி ராணி என அழைக்கப்பட்ட அஞ்சலையம்மாளுக்கு கடலூரில் சிலை அமைக்க வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று முழு உருவ சிலையை அமைத்து இம் மாதம் 2ஆம் தேதி திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சிதம்பரம் கோவில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடர்ந்து பக்தர்களுக்கு, பொது மக்களுக்கும் விரோதமான செயல்கள், விதிமீறல்கள் நடைபெற்று வருகிறது. எனவே இதனை அரசு தனிச் சட்டம் இயற்றி அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இதில் நீதிமன்ற உத்தரவு உள்ளது என கூறு கிறார்கள். அரசு சட்டம் இயற்றி எடுத்தால் எந்த நீதி மன்றமும் தடுக்க முடியாது. அதே போல் தான் காசி விஸ்வநாதர் ஆலயமும், பாஜக ஆளும் சட்டீஸ்கர் மாநிலத்தில் 12 கோவில்கள் தனி சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப் பட்டுள்ளது. இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன. நடராஜர் கோவில் என்பது வரலாற்று பொக்கிஷம் இதனை மற்ற தலைமுறையினருக்கும் அடையாளப்படுத்த வேண்டும். (சிதம்பரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கட்சியி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியிலிருந்து)