சிதம்பரம்,ஏப்.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் மாவட்ட குழு உறுப்பினர், பழ.வாஞ்சிநாதன் தாயாரும், தமிழ்நாடுஅரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கடலூர் மாவட்டசெயலாளர் ஜி. பழனியின் துணைவியாருமான தெய்வகன்னி (58) உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 5ஆம் தேதி காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரங்களில் வெளி மாவட்டங்களில் இருந்தால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் தொலைபேசியில் ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து வெள்ளியன்று செங்கல்மேட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கும் உறவினர்க ளுக்கும் ஆறுதல் கூறினார். கட்சியின் நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் அப்போது உடனிருந்தனர்.