இந்தியா கூட்டணி சார்பில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு வாக்கு கேட்டுவில்லிவாக்கம் பகுதி, அயனாவரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன் தலைமை தாங்கினார். அ.வெற்றியழகன் எம்எல்ஏ, செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.அன்பழகன், ஆ.பிரியதர்ஷினி எம்.சி, பகுதிக்குழு உறுப்பினர் சி.மார்டின், 98வது வட்டச் செயலாளர் எஸ்.ராமமூர்த்தி, திமுக பகுதிச் செயலாளர் வே.வாசு மற்றும் ஜான்சன் (எ) ஜெயேந்திரன், எஸ்.எம்.குமார், தனலட்சுமி சரவணன் எம்.சி., (காங்கிரஸ்), பா.கருணாநிதி (சிபிஐ), பா.சா.அப்துல் ரஹ்மான், வி.சிவலிங்கம் (மநீம) உள்ளிட்டோர் பேசினர்.