திருவள்ளூர், ஜூலை 18-
அரசு இயற்றிய சட்டத்தை அரசே மீறுகிறது என்று ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறினார்.ஒன்றிய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சிஐடியு சார்பில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவது போல, ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க வேண் டும். ஒரு தொழிற்சாலையில் 100 தொழிலாளர்கள் என்றால், ஐந்து பேர் மட்டும் தான் ஒப்பந்த தொழி லாளர்கள் இருப்பார்கள். இன்றைக்கு 95 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாகவும், 5 பேர் மட்டும் தான் நிரந்தர தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.
மீஞ்சூர் பகுதியில் உள்ள அதானி துறைமுகத் தில் 3500 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள், ஒருவர் கூட நிரந்தர பணி யாளர் இல்லை. இதில் நிலம் கொடுத்தவர்களும் உள்ளனர். நிலத்தையும் இழுந்து வேலையும் இன்றி உள்ளனர். எல் அண்ட் டி தொழிற்சாலையில் 4500 பேர் உள்ளனர் இதில் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்கள். கடல் நீர் குடிநீராக்கும் திட்டத்தில் 65 பேர் பணியாற்றுகிறார்கள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்கள். ஒன்றிய அரசுக்கு சொந்தமான காமராஜர் துறைமுகத் தில் 6000 பேர் பணியாற்று கின்றனர் இதில் 34 பேர் மட்டும் தான் நிரந்தர தொழிலாளர்கள்.
வட சென்னை அனல் நிலையம் அலகு இரண்டில் 1100 பேர், அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுகிறார்கள் ஒருவர் கூட பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. வல்லூர் அனல் மின் நிலையம் 2000 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் யாரையும் பணிநிரந்தரம் செய்யவில்லை. நிரந்தர தொழிலாளர்களே இல்லை என்றால், சட்டத்திற்கே விரோதமானது.சட்டத்தை மீறி அரசே ஒப்பந்த தொழி லாளர்களை அனுமதிக்கி றது. இதை தனியார் நிறு வனங்கள் பின்பற்றும் அதனை ஒன்றுபட்ட மக்கள் சக்தி எதிர்ப்பால், போராட்டத்தால் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும் என்றார்.