districts

அடையாறு ஆற்றில் குதித்து 2 பேர் தற்கொலை

திருவான்மியூர், ஆக.23-  

     அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்வது அதிகரிப்பதால் மேம்பாலத்தில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அதையும் தாண்டி குதித்து தற்கொலை செய்கிறார்கள். அடையாறு ஆற்றுப் பாலம் அருகே இன்று காலையில் ஒரு உடல் மிதந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர். அவரது சட்டைப்பையில் இருந்த ஒரு அடை யாள அட்டையை வைத்து விசாரித்தபோது இறந்தவர் பெயர் ஹரிசர்மா (55) கோட்டூர்புரம் சூர்யா நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.  

    காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சி னையில் இந்த துயர முடிவை எடுத்தது தெரிய வந்தது. இதேபோல் பெசன்ட் நகரை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரும் நேற்று மாலையில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இன்று காலையில் மீட்கப்பட்டது. இது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.