புதுச்சேரி, மார்ச் 26- ஊழல் பணத்தை பெற்றதின் மூலம் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை மத்திய விசாரணை அமைப்பு கள் கைது செய்திருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். புதுச்சேரியில் செவ்வாயன்று (மார்ச் 26) செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி, தமிழ கத்தில் உள்ள 40 தொகுதிகளில் கடந்த முறை 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இந்த முறை 40 தொகுதி யிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றார். மத்தியில் பாஜக ஆட்சி யில், புதுச்சேரியில் தேசிய ஜன நாயக கூட்டணி ஆட்சி என இரட்டை என்ஜின் ஆட்சி நடக்கிறது. ஆனால், மக்கள் நலன் எதுவும் பாது காக்கப்படவில்லை. கோரிக்கை எதுவும் நிறைவேற்றவில்லை. 2014ல் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என பாஜக பொய் வாக்குறுதியை கொடுத்தது. அதேபோல், விவசாயிக ளின் வருமானத்தை இரட்டிப்பாக்கு வோம் என்றது. அதையும் நிறை வேற்றவில்லை.
ரேசன் கடையை மூடிய ஆட்சி
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் போட்டியிடுகிறார். இரண்டு கட்சிகளும் 2021 சட்டமன்ற தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடையை திறப்போம் என்றார்கள். ஆனால், திறக்கவில்லை. மாறாக, தெருவுக்கு நான்கு ரெஸ்டோ பார்களை திறக்க அனுமதி கொடுத்தார்கள். ரெஸ்டோ பார், போதை பொருள் விளை வால் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ கத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ஊழலை சிறிது அளவு கூட பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்றார். ஆனால், தேர்தல் நிதி பத்திர திட்டத்தின் மூலம் பாஜக உலகிலேயே மெகா ஊழலை செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக ரூ.16 ஆயிரம் கோடி தேர்தல் நிதி பத்திரம் மூலம் அளிக்கப்பட்ட நிதியில் ரூ.8,252 கோடி நிதி பாஜகவுக்கு சென்றுள்ளது. பாஜகவுக்கு தேர்தல் நிதி கொடுத்த முதலாளிகளுக்கு பல கோடிக்கு சலுகையை கொடுத்துள்ளது. இந்த அளவுக்கு உலக மகா மோசடி நடந்துள்ளது. இது வெளியே வராமல் தடுக்க எவ்வ ளவோ முயற்சி செய்தது. தற்போது தேர்தல் நிதி பத்திர ஊழல் அம்பல மாக்கிய பிறகு பாஜக மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகி யுள்ளது. இதனால் தோல்வி பயத்தில் ஜார்க்கண்ட, தில்லி ஆகிய மாநில முதல்வர்களை கைது செய்து சிறையில் வைத்துள்ளார்கள். தில்லியில் மதுபான கொள்கை விவகாரத்தில் பணம் பட்டுவாடா செய்த தாக எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், தேர்தல் நேரத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரத்துக்கு செல்லக் கூடாது என்ப தற்காக அவரை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர்.
பிரதமர் ராஜினாமா
ஊழலை தாங்கி கொள்ள மாட்டேன் என பிரதமர் மோடி பேசு கிறார். உச்சநீதிமன்றத்தால் அவர் கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தி ருப்பதின் மூலம் பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்தி ருக்க வேண்டும் என்றார். ஆனால், ஊழல் செய்தவர்கள் பாஜக வில் இணைந்தால் புனிதராகி விடு கிறார்கள். எனவே, தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் வடமாநிலங்களிலும் பாஜகவை வீழ்த்தி இந்திய கூட்டணி வெற்றி பெறும் . அந்த வகையில், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளை கவிழ்ப்பது, நிர்வாகத்தை சீர்குலைக்கும் வேலையை கிரண்பேடி துவங்கி தற்போது உள்ள ஆர்.என்.ரவி வரை பாஜக கொல்லை புறமாக ஆட்சி நடத்தி வரு கிறது. இத்தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெற்றி பெற முடி யாது. பெரும்பாலான இடங்களில் பாஜக வினர் டெபாசிட்டை இழப்பார்கள் என்றும் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார். பாஜக தலைமை 300 முதல் 400 இடங்களில் பாஜக வெல்லும் என்று உளவியல் ரீதியாக கட்டமைக்க முயற்சிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். பேட்டியின் போது புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் சுதா,பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்தியா ஆகியோர் உடனிருந்தனர்.