வேங்கிக்கால்,ஆக.10-
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளியன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழி காட்டு மையத்தில் நடை பெறுகிறது.
இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் இந்த முகாமில் 250-க்கும் மேற்பட்ட பணி யிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8-ம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு வரை படித்தவர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.