திருவண்ணாமலை, டிச.15- பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், கிராம செவிலியராக பதவி உயர்வு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு ஆஷா ஊழி யர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஜெயசித்ரா தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே. காங்கேயன் துவக்கி வைத்தார், ஆஷா ஊழியர் சங்க மாநில தலைவர் டெய்சி, பொரு ளாளர் எம் .பார்வதி, சிஐடியு மாவட்டச் செய லாளர் இரா. பாரி, மாவட்ட பொருளாளர் எஸ். முரளி ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.