திருத்தணி வட்டம், ஆர்டிஓ சத்யா நகரில் ஜேஎம்ஜே சமூக சேவை அறக்கட்டளை ஆண்டு விழா வியாழனன்று (டிச.28) நடைபெற்றது. இதில் பட்டாபிராமபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேவி பாஸ்கர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட க் குழு உறுப்பினர் அந்தோணி, அறக்கட்டளை திட்ட மேலாளர் அருள், லிசினா மேரி மற்றும் களப்பணியாளர்கள் பங்கேற்றனர். மேலும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.