ஜெய.தென்னரசு காலமானார்: சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி
திருவள்ளூர், ஏப்.16- தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாவட்ட துணைத் தலைவர் தோழர் ஜெய.தென்னரசு உடல்நலக்குறைவால் சனிக் கிழமையன்று (ஏப்.16) காலமானார். அவருக்கு வயது 67. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஜெய. தென்னரசு, தினகரன், முரசொலி, விடுதலை ஆகிய நாளிதழ்களில் பணியாற்றி வந்த தென்னரசு. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட துணைத் தலைவராக களப்பணியாற்றி வந்தார். முன்னணி, துவக்கப்பட்டதிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களிலும் பங்கு பெற்றார். திருவள்ளூர் மாவட்ட பழங்குடியினர் நலச்சங்கத்தை துவக்கி பொன்னேரி, மீஞ்சூர், மாதர்பாக்கம், தாமரைப்பாக்கம், திருவள்ளூர் என மாவட்டம் முழுவதும் சென்று பழங்குடி இன மக்களுக்கு குடி மனைப் பட்டா, குடிநீர், சாலை, சுடுகாட்டுப் பாதை ஆகியவற்றை போராடி பெற்று தந்தவர். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி. கண்ணன், ஆர்.தமிழ்அரசு, இ.மோகனா, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் அ.து.கோதண்டன், கங்கா தரன், அருள், உதயா உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தினர். மறைந்த ஜெய. தென்னரசின் சொந்த ஊரான பெருமாள் பட்டில் உள்ள இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. டியூஜெ இரங்கல் ஜெய.தென்னரசை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு பத்திரி கையாளர் சங்கத்தின் (டியூஜெ) சார்பில் மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் முருக்கனி, பெ.ரூபன், கோவிந்தராஜூ உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்திக்கு ‘பிரதமர் விருது’
காஞ்சிபுரம், ஏப்.16- கிராமப்புறங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில், ஒன்றிய அரசு ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை கொண்டு வந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ், 100 விழுக்காடு குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக ஒன்றிய அரசின் ‘பிரதமர் விருது’ காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21-ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, ஆட்சியர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.
பள்ளிகளில் சிலம்பம் பயிற்சி கோரி ஆர்ப்பாட்டம்
சென்னை,ஏப்.16- பள்ளிகளில் சிலம்பம் பயிற்சி அளிக்க வலியுறுத்தி உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிலம்ப விளையாட்டு வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும், அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளி, தனியார் பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளிலும் சிலம்பம் பயிற்சி அளிக்க வேண்டும், சிறந்த மூத்த ஆசான்களுக்கு மாதாந்திர ஊதிய மும், திறமையான ஆசான்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிலம்ப விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
காசிமேடு மார்க்கெட்டில் மீன் விலை உயர்வு
சென்னை, ஏப்.16- மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் கிழக்கு கடற்கரை பகுதி களில் தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஏப்.15) முதல் அமலுக்கு வந்தது. இந்த தடை ஜூன் 16 ஆம் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கும். இந்தநிலையில், தடைக்காலம் தொடங்கியதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் விலை ஏறியது. சனிக்கிழமை யன்று ரூ.800-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ரூ.1000-ம் ஆகவும், சங்கரா ரூ.350-ல் இருந்து ரூ.400 ஆகவும், இறால் ரூ.300-ல் இருந்து ரூ.400 எனவும் மீன்களின் விலை ஏறியது.
இஞ்சி விலை கடும் உயர்வு
சென்னை,ஏப்.16- சென்னை கோயம்பேடு சந்தையில் இஞ்சி வரத்து குறைவு காரணமாக சில்லரை விற்பனையில் கிலோ ரூ.125 முதல் ரூ.140 வரை விற்பனையானது. இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் கூறியதாவது:- ஏப்ரல் மாதம் முழுவதும் இஞ்சியின் நடவு காலம் என்ப தால் அதன் வரத்து குறைந்து உள்ளது. இரு வாரங் களுக்கு முன்பு கிலோ ரூ.60 முதல் 70 வரை மொத்த விலை யில் விற்பனை செய்யப்பட்டு வந்த இஞ்சி, தற்போது கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை யில் கிலோ ரூ.125 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப் படுகிறது.
ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி
காஞ்சிபுரம், ஏப்.16- காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரத்தில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பஜார் வீதியில் தனியார் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு இந்த மையத்தில் இருந்த ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. எந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையன் தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். விசார ணையில் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (32) என்பது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெருமாள் ஏரி தூர் வாரும் பணி: அமைச்சர் நேரில் ஆய்வு
கடலூர், ஏப்.16- கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பெரு மாள் ஏரி தூர் வாரும் பணி நீர் வளத்துறை யின் சார்பில் ரூ.112.42 கோடியில் நடை பெறுவதை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டத்திலும் கலந்துகொண்டார். பெருமாள் ஏரியின் கொள்ளவு 574 மில்லியன் கன அடியாகும். தற்போது 228.86 மில்லியன் கன அடியாக உள்ளது. தற்போது தூர் வாரும் பணியின் மூலம் சுமார் 1.40 கோடி கனமீட்டர் அளவிளான மண் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மண் எடுக்கப்பட்டு முடியும் தருவாயில் ஏரியின் கொள்ளவு அதன் தற்போதைய கொள்ளவான 228.86 மில்லியன் கன அடி யிலிருந்து 723.27 மில்லியன் கன அடியாக உயரும். எனவே இதன் மூலம் ஏரியின் இயல்பான கொள்ளவை விட கூடுதலாக 149.27 மில்லியன் கன அடி நீர் சேமிக்க இயலும். பெருமாள் ஏரியின் மூலம் 6,503 ஏக்கர் விலை நிலங்கள் தற்போது வரை 1 போக சாகுபடிக்கு பாசன நீர் பெற்று வந்தது. இப்பணி முடிவுற்றதும் சுற்றியுள்ள விளைநிலங்கள் இருபோக சாகுபடிக்கு பாசன நீர்பெறும் வகையில் அமையும். இதுவரை சுமார் 80 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் அடுத்த 3 மாதங்களில் முடிவடையும். ஏரியின் சுற்றுபுறங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வளாகமாக உரு வாக்கப்படும். மேலும் விவசாயிகள் வைத்த கோரிக்கை யினை ஏற்று இந்த ஏரியில் இருந்து பிரியும் 11 பிரதான பாசன வாய்க்கால்களை தூர்வாரி சிறப்பான முறையில் பாசன வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர் காந்தரூபன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் போலி மருத்துவர்கள் கைது
கள்ளக்குறிச்சி, ஏப். 16- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் சிலர் மருத்துவம் பார்ப்பதாக காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கச்சிராயபாளையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் துறையினர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே விஜய் (26), எடுத்தவாய் நத்தம் ஊராட்சி மன்றம் அருகே ரகுமான் (52), திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருபாநிதி (35) ஆகியோர் மருத்துவம் படிக்காமல் தங்களது மருந்துக் கடைகளில் போலி மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஏரியில் மூழ்கி 2 பேர் பலி
மத்தூர், ஏப். 17- கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகன் (40). இவருடைய மனைவி பார்வதி (35). இவர்களுக்கு அர்ச்சனா (14), புவனா (10) என்ற 2 மகள்களும், வினோத் (8) என்ற மகனும் உள்ளனர். இதில் புவனா மத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பும், வினோத் அதே பள்ளியில் 3ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை என்பதால் புவனா, வினோத் ஆகியோர் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள மாதவபுரம் ஏரிக்கு குளிக்க சென்றனர். அப்போது புவனா ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதைக் கண்ட வினோத் அக்காள் புவனாவை காப்பாற்றுவதற்காக தானும் ஆழமான பகுதிக்கு சென்ற வினோத்தும் தண்ணீரில் மூழ்கினார். இதில் அக்காள், தம்பி இருவரும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மத்தூர் காவல் துறையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலாற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பு
ஆம்பூர், ஏப். 16- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோமலா புரம் ஊராட்சி பாலாற்றில் ரசாயன கழிவு பிளாஸ்டிக் கேன்களை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். தீ கொளுந்து விட்டு எரிந்த தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி யளித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா செடிகள் அழிப்பு
கள்ளக்குறிச்சி, ஏப். 16- கல்வராயன் மலைப் பகுதியில் பயிரிடப்பட்ட சுமார் 20 கிலோ கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட் டம், கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் பால கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை காவலர்கள் கல்வராயன் மலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெங்களூர் கிராமத்தில் தண்ணி பள்ளம் ஓடை அருகே சட்டவிரோதமாக கஞ்சா செடி பயிரிடப்பட்டி ருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் கஞ்சா செடி பயிரிடப்பட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (32) என்பவரை கைது செய்து, சுமார் 20 கிலோ கஞ்சா செடிகளை அழித்தனர்.
88 பேருக்கு கொரோனா
புதுச்சேரி, ஏப். 16- புதுவையில் 840 பேருக்கு கொரோனா தொற்று பரி சோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 62, காரைக் காலில் 23, ஏனாமில் 3 பேர் என மொத்தம் 88 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 21, காரைக்காலில் 2 பேர் என 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.புதுவை யில் 331, காரைக்காலில் 147, ஏனாமில் 24, மாகியில் 7 பேர் என மொத்தம் 509 பேர் கொரோனா தொற்றுடன் வீட்டு தனி மையில் உள்ளனர். புதுவையில் 55, காரைக்காலில் 2 பேர் என 57 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டனர். புதுவை யில் இதுவரை கொரோனாவுக்கு 1978 பேர் பலியாகி யுள்ளனர். புதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.