பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஜன.5) தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு நிர்வாகிகள் மு.அன்பரசு, மாயவன், வெங்கடேசன், பெருமாள்சாமி, சங்கரபெருமாள், காந்திராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.