ஒன்றிய அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளை படுகொலை செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வெள்ளியன்று (பிப்.23) மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.விஜயா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி. மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்சி உள்ளிட்டோர் பேசினர்.