திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு இன்றளவும் இயங்கிக்கொண்டிருக்கும் சண்முகனார் பூங்காவுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். ஆனால், இங்குள்ள விளையாட்டு பொருட்கள், செயற்கை நீரூற்று, முயல் மற்றும் காதல் பறவைகள் கூண்டுகள் முறையாக பராமரிக்காமல் சேதமடைந்து வருவதை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.