districts

img

பட்டா கொடுத்தும் பயனில்லை: இருளர் இன மக்கள் ஆவேசம்

வேலூர், டிச.26 - வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் வட்டம், வடுகந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட ராஜாபாளையம் விக்ரமாசி பகுதியில் இருளர் பழங்குடி மக்கள் வசித்து வரு கின்றனர். இந்த பகுதி நீர்வரத்து கால்வாய் என்பதால் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் வட்டாட்சி யரிடம் கோரி மனு அளித்தனர். அதன் அடிப்படையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி 12 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஓராண்டைக் கடந்த நிலை யிலும் அந்த மக்களுக்கு ஒதுக்கப் பட்ட இடம் எது, என்பது அடை யாளம் காணப்படவில்லை. அளந்தும் கொடுக்கவில்லை. இத னால் அரசின் இலவச தொகுப்பு கள் திட்டத்திற்கு தேர்வு செய்ய முடிய வில்லை. குடிசைகளுக்கு இருபுற மும் கால்வாயில் இருந்து தண்ணீர் சூழும் ஆபத்தான சூழ்நிலையில் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில், இடத்தை அடை யாளங்கண்டு, அளந்து கொடுத்து, அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்க வேண்டியும், சாலை, தெரு விளக்கு மற்றும் குடிநீர் மேல் தேக்க தொட்டி வசதியும் செய்து கொடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட அமைப்பாளர் சி.எஸ்.மகாலிங்கம் தலைமையில் கே.வி. குப்பம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் ஆர்.சரவணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். மாநில துணைச் செயலாளர் எம்.மாரிமுத்து, சிபிஎம் செயலாளர் ஆர்.சுடரொளியின், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சாமி நாதன், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செய லாளர் செ.ஏகலைவன், லோ.நவீன் (வாலிபர் சங்கம்), ஜி.நரசிம்மன், புண்ணியமூர்த்தி, கோபால.ராசேந்திரன் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வட்டாட்சியரை மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், 10 நாட்களுக்குள் இடத்தை அளந்து தருவதாக உறுதியளித்தார். காளாம்பட்டு பாறையூர், அச்சுக்கட்டு பகுதியினருக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தர ஆதி திராவிடர் நலத்துறைக்கு கோரிக்கை மனு அளித்தால் பரிந்துரை செய்வதாகவும் தெரி வித்தார்.