districts

பாலம் கட்ட தடையாக இருக்கும் ஊராட்சிமன்ற தலைவரின் கணவர்

கடலூர், ஜூன்.26-

     முகுந்தநல்லூர் சின்ன ஓடையில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம்  சிபிஎம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாத வன், வட்ட செயலாளர் என்.எஸ். அசோகன் தலைமையில் முகுந்தநல்லூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

     விருத்தாசலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முகுந்த நல்லூர் ஊராட்சியில் தெற்கு பகுதியில் சர்வே எண் -108ல்  சின்ன ஓடை உள்ளது. இந்த ஓடையை  கடந்து சென்று தான் 200 ஏக்கர் விவசா யம் பயிர் செய்ய வேண்டி உள்ளது.  அது மட்டும் இல்லாமல் மயானத்திற் கும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.

    மழைக் காலங்களில் அதிக  அளவில் நீர் செல்வதால் இந்த சின்ன ஓடையை கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் விவசா யம் பாதிப்படைவதோடு மயானத் திற்கும் செல்லும் பாதை முடங்குகி றது. எனவே அரசின்  திட்டத்தின் கீழ்  பாலம் அமைத்து தர வேண்டும். இதே கோரிக்கை வலியுறுத்தி கடந்தாண்டும் மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் பிறகு மாவட்ட ஆட்சியர், கிராமத்திற்கு நேரடி யாக வந்து அந்த இடத்தினை பார்வையிட்டு நிதி ஒதுக்கீடு செய்து  பாலத்தை கட்டுவதற்கு உத்தரவிட்டார்.

    ஆனால் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கணேசன் என்பவர் பல முனைகளில் தலையிட்டு இந்த பணியை நிறுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுவந்தார். ஏனென்றால் அந்த பாலம் கட்டும் ஒப்பந்தப்பணியை தனக்கு கொடுக்காமல் வேறுஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்பட்டதால் பாலம் கட்ட விடாமல் முட்டுக்கட்டை போடுவதாக  கூறப்படுகிறது.மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.