கடலூர்,ஜன.24- தை பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய ஞான சபையில் வியாழக்கிழமை (ஜன.24) ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி பல்லா யிரக்கணக்கான மக்கள் வடலூரில் கூடுவார்கள். ‘வாடி பயிரை கண்டபோ தெல்லாம் வாடினேன்’என்று கூறிய வள்ளலார் கூற்றுக்கு இணங்க அங்கு அணையா அடுப்பு மூலம் தினந்தோறும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சத்திய ஞான சபைக்கு காய்கறிகள் மற்றும் அரிசி மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூரை சேர்ந்த எஸ்கேபி காய்கறி கடை உரிமையாளர், சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாவட்ட தலைவருமான எஸ்.கே.பக்கிரான் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 10 டன் காய்கறிகள் மற்றும் 50 மூட்டை அரிசி மூட்டைகளை சத்திய ஞான சபைக்கு அனுப்பி வைத்தார். மேலும் 3 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும் வாக னத்தில் அனுப்பி வைத்தார். இஸ்லாமியரான அவர் தொடர்ந்து 20 ஆண்டு கால மாக இதை செய்து வரு கிறார். கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகர செயலாளர் ஆர்.அமர் நாத் வர்த்தக சங்க மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், நகர செயலாளர் வள்ளி விலாஸ் சீனிவாசன், கவுரவ தலைவர் வி.பி.எஸ். கணேசன், தேவி முருகன், மாவட்ட இணைச் செயலாளர் சதீஷ், நகர இணை செயலாளர் சரவணன் மற்றும் வெங்கட் உள்பட பலர் உடனி ருந்தனர்.