districts

img

குப்பை கிடங்கிற்குள் நுழையவா கட்டண வசூல்? உயர்நீதிமன்றம்

சென்னை, ஏப். 19 - நுழைவு கட்டணம் வசூ லிப்பது குப்பை கிடங்கிற் குள் நுழையவா என  மாமல்லபுரம் பேருராட்சி யிடம் சென்னை உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்,  மாமல்லபுரம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்பட்டு, கால்வாய் பகுதி குப்பை பிரிக்கும் இடமாக பயன் படுத்தப்பட்டு வருவதாக தனேஜா வீட்டுமனை உரிமை யாளர்கள் சங்கம் சார்பில் 2018ம் ஆண்டு வழக்கு தொட ரப்பட்டது. அந்த மனுவில், மாசு கட்டுப்பாட்டு சட்டத்தின் விதி களைப் பின்பற்றி, குப்பை  பிரிக்கும் பகுதி அமைக் காதது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்  நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குப்பைக் கிடங்கின் தற் போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய பெண்  வழக்கறிஞர் என்.டி. நானே என்பவரை நீதிமன்ற ஆணை யராக நியமித்து உத்தர விட்டது. இந்த வழக்கு தலைமை  நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி அமர்வு  முன்பு மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது, குப்பை கிடங்கு செயல்பட வில்லை எனக் கூறி அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற ஆணையர் அளித்த அறிக்கையில், 2008ம் ஆண்டு முதல் கிடங்கு செயல்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், யுனெஸ்கோவால் அங்கீக ரிக்கப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தை முறையாக பராமரிக்க வேண்டும். சுற்று லாத்தளத்தை முறையாக பராமரிக்காத அதிகாரியை தண்டிக்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர். பேரூராட்சியில் நுழைவு கட்டணம் வசூலிப்பது குப்பை கிடங்குக்குள் நுழையவா எனவும் கேள்வி எழுப்பி, அரசு அறிக்கையை மனுதாரர் தரப்புக்கு வழங்க  உத்தரவிட்டு, வழக்கு விசார ணையை ஒத்தி வைத்தனர்.

;