கள்ளக்குறிச்சி, டிச.23 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய விண்ணப் பம் செய்தவர்களிடம் அதி காரிகள் ஆய்வு செய்தனர். இந்த பணி மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளரும் தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையருமான வள்ளலார், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சி யருமான ஷ்ரவன் குமார் முன்னிலையில் நடை பெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி (தனி), உளுந்தூர்பேட்டை. ரிஷி வந்தியம், சங்கராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்த் தல், நீக்கம், திருத்தம், முகவரி மற்றும் புகைப்பட மாற்றம் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.