சென்னை, செப்,24- சென்னை சேத்துப்பட்டில் உள்ள டாக்டர் மேத்தா மருத்துவமனையில் புரோஸ்டேட் விரிவாக்கத்திற்கான அதிநவீன மேம்பட்ட லேசர் சிகிச்சை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. புரோஸ்டேட் விரிவாக்கம் அல்லது ப்ரோஸ்டேடிக் ஹைப்பர் பிளாசியா (BPH), நீண்ட காலமாக எண்ணற்ற நபர்களை பாதிக்கும் ஒரு மருத்துவ பிரச்சனையாக உள்ளது. வழக்கமாக அளிக்கப்படும் பாரம்பரிய சிகிச்சை முறைகள், பயனுள்ளவையாக இருந்தாலும், நோயாளிகளுக்கு அதிக சிரமம் மற்றும் அதிக குணமடையும் நேரத்தை கொண்டுள்ளன என்று சிறுநீரக மருத்துவ நிபுணரும் மருத்துவமனையின் சிறுநீரக துறை தலைவருமான டாக்டர் கபிலன் சாமிநாதன் குறிப்பிட்டார். எனவே “லேசர் சிகிச்சையை புரோஸ்டேட் விரிவாக்க நோயிக்கு ஒரு திருப்புமுனையாக கருதுவதாக அவர் கூறினார். இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு துல்லியமான சிகிச்சையை வழங்கு கிறது. இதன் விளைவாக விரைவாக குணமடைதல், குறைவான ரத்தப்போக்கு, குறைவான ஆபத்து, குறுகிய மருத்துவமனையில் தங்குதல் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கு பங்களிக்கிறது என்று மருத்துவ குழும தலைவர் டாக்டர் சரவண குமார் கூறினார்.