districts

img

டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் ஸ்டெம் செல் சிகிச்சை அறிமுகம்!

சென்னை, செப்.3- மருத்துவத்துறையில் புதிய கண்டு பிடிப்புகளை தமிழ்நாட்டிற்கு அறி முகம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் டாக்டர் காம ராஜ் மருத்துவமனையில் ஸ்டெம் செல் சிகிச்சை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இம் மருத்துவமனையில் செயல் பட்டுவரும் டாக்டர்.ராதாகிருஷ்ணன் இன்டர்நேஷனல் ஆர்த்தோ கேர் சென்டரும், அமெரிக்காவில் ஸ்டெம் செல் சிகிச்சை ஆராய்ச்சியில் புகழ் பெற்ற நிறுவனமான ஜியோஸ்டார் நிறு வனமும் இணைந்து இந்த சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளதாக டாக்டர் டி.காமராஜ் கூறினார், சென்னையில் சனிக்கிழமை செய்தி யாளர்களிடம் பேசிய அவர்,  நோய்கள் மற்றும் உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க ஸ்டெம் செல்களை பயன்படுத்தும் ஒரு மருத்துவ முறை, ஸ்டெம் செல் சிகிச்சை ஆகும். இந்த செல்கள் ரத்த அணுக்கள், மூளை செல்கள் மற்றும் தசை செல்கள் போன்ற உடலில் உள்ள பல்வேறு வகையான செல்களாக உருவாகும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளன.     நோயாளியின் உடலில் இந்த சிறப்பு செல்களை செலுத்துவதன் மூலம் சேதம் அடைந்த அல்லது நோயுற்ற திசுக்களை ஆரோக்கியமாக மாற்ற முடியும். இதற்காக மருத்துவ மனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிக்கலான அறுவை சிகிச்சையும் தேவைப்படாது.  இதய நோய், நீரிழிவு, மூட்டுவலி,முதுகுத் தண்டுவட காயங்கள், ஆண்மைக்குறைவு, விந்தணு உற்பத்தி பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை யளிக்கப்படுகிறது.    

ஸ்டெம் செல் சிகிச்சையானது மற்ற அனைத்து வகையான சிகிச்சை வாய்ப்புகளும் திருப்திகரமாக இல்லாதபோது  மாற்று அணுகுமுறையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  விரைவில் நலம் பெறவும் உதவுகிறது என்றார்.  கட்டுப்படுத்த முடியாத முடி கொட்டுதல், சர்க்கரை நோய், நாள்பட்ட ஆறாத புண், குடல் அழற்சி, புற்று நோய், குழந்தையின்மை, விந்தணு உற்பத்தி குறைபாடு, விறைப் புத்தன்மை குறைபாடு உட்பட பல விதமான பாதிப்புகளுக்கு விரைவான சிறப்பான சிகிச்சை கிடைக்கும். இந்த  ஸ்டெம் செல் சிகிச்சை மையத்தின் துவக்க விழா செப்.4 (திங்கட்கிழமை) காலை 10 மணியள வில் டாக்டர் காமராஜ் மருத்துவமனை வளாகத்தில் நடை பெறுகிறது. இவ்வாறு டாக்டர் டி.காமராஜ் கூறினார். ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜெயராணி காமராஜ் கூறுகையில்,  குழந்தையின்மை சிகிச்சையில் ஸ்டெம் செல் தெரபிக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. குழந்தையில்லாமல் அவதிப்படும் தம்பதி வாடகைத் தாயை நியமிப்பதில் பல சட்டசிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் குழந்தைப்பேறு எளிது என்றார்.  எலும்பியல் நிபுணர் டாக்டர் பி.ராதா கிருஷ்ணன், டாக்டர் நிவேதிதா, ஜியோ ஸ்டார்- யு,எஸ்.ஏ. நிறுவன பிரதிநிதி டாக்டர் திலிப்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.