கிருஷ்ணகிரி,ஏப்.12- கும்பல் படுகொலையை நாட்டிற்கு அறிமுகப்படுத்திய பாஜகவை அடையாளம் தெரியாத அளவுக்கு படுமோசமாக தோற்கடிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கேட்டுக்கொண்டார். கிருஷ்ணகிரி மக்களவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து ஊத்தங்கரையில் நடை பெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர், பேசியதாவது : கடந்த 10 ஆண்டுகளில் பெண்க ளுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் பல இடங்க ளில் பெண்கள் கடுமையாக அடித்தே கொல்லப்படுகிறார்கள், வெளி நாடுகளில் இருந்து வரும் பெண்க ளுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறியுள்ளதாக சர்வதேச அறிக்கை கூறியுள்ளது. மேலும். மாட்டுக்கறி வைத்திருந்த னர் என்றும், லவ்ஜிகாத் எனும் பெய ரிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். பாஜக ஆட்சி யில் தான் கும்பல் படுகொலை (லிஞ்சிங்) எனும் சொல் புழக்கத்திற்கு வந்துள்ளது. மோடி தனது கிருஷ்ணகிரி பிரச்சாரத்தில் பெண் ஒருவரிடம் இலவச கேஸ் சிலிண்டர் வந்ததா என கேட்டுள்ளார். அத்தோடு அடுத்த முறை சிலிண்டருக்கு என்ன செய்வீர்கள் என கேட்டிருந்தால் அவருக்கு அந்த பெண் சரியான பதிலடி கொடுத்திருப்பார். ஏப் 19க்கு பிறகு பாஜக சிதறி ஓட வேண்டும். தற்போது அதற்கு நமக்கு கிடைத்த வாயப்பே இந்த தேர்தல். 2 மாதம் முன்பு வரை பாஜகவுடன் கூட்டாய் இருந்த அதிமுக இப்போது நாங்க வேற அவுங்க வேற என பசப்புகிறது. மக்களை விவசாயிகளை, தொழி லாளிகளை ஜனநாயகத்தை தேச ஒற்றுமையை ஒழித்துக்கட்ட பாஜக சட்டங்களை திருத்திய போதெல்லாம் ஆதரவு தெரிவித்தீர்களே என்றால் அது கூட்டணி தர்மம் என எடப்பாடி வெட்க மின்றி கூறுகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை செய்தித்தாளில் படித்து தெரிந்து கொண்டாதாக கூறிய எடப்பாடி நானும் விவசாயி தான் என பச்சை துண்டை தலையில் கட்டிக் கொண்டு திரிகிறார். தில்லி விவசாயி கள் போராட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட வர்களை ஒன்றிய அரசு கொன்றுள்ளேதே என கேட்டால் அவர்கள் உண்மையான விவசாயிகள் இல்லை என்கிறார். குடியுரிமை திருத்தச்சட்டதை ஆதரித்து கையெழுத்து போட்டீர்களே, நீட்டை ஆதரித்தீர்களே என்றால் அதனால் யாரும் பாதிக்கவில்லை அது கூட்டணி தர்மம் என்று நாகூசமால் சொல்கிறார். எடப்பாடி பழனிச்சாமியும், மோடியும் செய்தது தமிழ்நாட்டுக்கும் தேசத்திற்கும் மிகப்பெரும் துரோகம் அல்லவா. எனவே மக்கள் விரோத, தேச விரோத பாஜக, அதிமுக அணிகளை ஓட ஓட விரட்டிட இந்தியா கூட்டணிக்கு வாக்களிக வேண்டும்,கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத்துக்கு கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் என்றார். மாவட்டச் செயலாளர் ஜி.கே நஞ்சுண்டன், செயற் குழு உறுப்பினர்கள் கோவிந்த சாமி,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி சி.பி. ஜெயராமன், மாவட்ட குழு உறுப்பி னர்கள் அண்ணாமலை, கவிமணி தேவி, வட்ட ஒன்றிய செயலாளர்கள் போச்சம்பள்ளி சாமு, பர்கூர் சீனி வாசன்,சிங்காரப்பேட்டை சபா பதி,ஊத்தங்கரை வட்ட நிர்வாகி கள் லெனின் செல்வராஜ் மொலுகு,வேலு,எத்திராஜ்,மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதா, திமுக, விசிக, காங்கிரஸ் வட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.