சென்னை, ஏப். 8- 2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக (65லட்சம் கோடி ரூபாய்) மாற வேண்டும் என்ற லட்சிய இலக்கை தமிழக அரசு அடைய இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) உறு துணையாக இருக்கும் என்று அதன் தென்மண்டல புதிய தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி கூறினார். சென்னையில் செவ்வாயன்று (ஏப்.8) செய்தியாளர்களிடம் பேசிய அவர் தென் மண்டலத்தைப் பொறுத்தவரை இங்கு ஏராளமான தொழிற்சாலைகள், திறமை யான தொழிலாளர்கள் மற்றும் வலுவான உள்கட்டமைப்பு உள்ளது. தென்மாநிலங்கள் இந்தியாவின்ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31 விழுக்காடு பங்களிப்பை வழங்குவதாக கூறினார். தென் மாநி லங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில் உள்ளன. எனவே நாங்கள் இந்தப் பகுதி களில் புதுமையான தொழில்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த உள்ளோம் என்றும் அவர் தெரி வித்தார். மேலும் 2024-25ம் ஆண்டில்நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பகுதி கள் குறித்து பேசிய நந்தினி கூறுகையில், தென்னிந்தியா@100 என்ற திட்டத்தின் கீழ், தொழிற்துறையில் போட்டித்திறனை அதிகரித்து வளர்ச்சியை உருவாக்க விரும்பு கிறோம் என்றார். இந்த ஆண்டும், கல்வி, திறன் மேம்பாடு, புதிய தொழில்நுட்பம் ஸ்டார்ட்அப்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் எளிய முறையில் வர்த்தகம், உற்பத்தி ஆகியவற்றில சிஐஐ கவனம் செலுத்தும் என்றும் அவர்கூறினார். தொழிற்துறை வளர்ச்சிக்காக தென் மாநில அரசுகள் மற்றும் தொழில்துறை நிறு வனங்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் அவர் கூறினார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களை ஊக்குவித்து வரும் ஆண்டுகளில் நிலையான தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக 2024-25ம் ஆண்டுக்கான சிஐஐ தென் மண்டலபுதிய தலைவராக ஆர்.நந்தினி, துணைத் தலைவராக ஜான் முத்தூட் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.