வேலூர், டிச.7- தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் கருத்தரங்கு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இக்கருத்தரங்கில் உலக அளவில் பூட்டான், பாட்ஸ் சுவானா, எத்தியோப்பியா, கானா, கெய்னா, மடகா ஸ்கர், மலேசியா, இலங்கை, மொராக்கோ, மியான்மர், நைஜர், சீசல்ஸ், சிரியா, தஜகிஸ்தான், உஸ்பெக்கி ஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே உட்பட 16 நாடுகளை சேர்ந்த 28 வல்லுநர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கருத்தரங்கின் ஓர் அங்கமாக இக்குழுவினர் சர்வதேச தரத்தில் உள்ள வேலூர் விஐடியின் உட்கட்டமைப்பு, கல்வி முறை, ஆராய்ச்சி மற்றும் பல்வேறு பயிற்சிகள் குறித்து விஐடி துணைத் தலைவர் டாக்டர் ஜி.வி. செல்வம்,துணைவேந்தர் (பொறுப்பு) டாக்டர் காஞ் சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் டாக்டர் பார்த்தசாரதி மல்லிக் மற்றும் பல்வேறு துறைகளின் பேராசிரியர்களுடன் கலந் துரையாடினர்.