திருவண்ணாமலை, மே 25-
பெரணமல்லூர் பேரூராட்சியின் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலரை பேசவிடாமல் அவமதிப்பு செய்த தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் மா.கொளதம் முத்து மக்கள் கோரிக்கைகளைப் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரை தொடர்ந்து பேச விடாமல் பேரூராட்சித் தலைவர் வேணி ஏழுமலை ‘வெளியே போ’ என்று அவமதிப்பு செய்துள்ளார். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), தமிழ்நாடு முதல மைச்சர் (தனிப்பிரிவு )ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் கடிதம் அனுப்பியும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய தலைவர்கள், “ பேரூ ராட்சியிலுள்ள 12 வார்டுகளிலும் மக்க ளின் அடிப்படை பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணவேண்டும் என்றம் காந்தி நகருக்கு நடமாடும் ரேசன் கடை காரியமேடை இல்லாத பகுதிகளுக்குக் காரிய மேடை, புதியதாக உருவாகியுள்ள பகுதிகளுக்குக் குடிநீர்க் குழாய், தெரு விளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினர்.
பேரூராட்சி நிர்வாகத்தை ஜனநாயகப்படி நடத்தவும், முறையாக தீர்மானங்களை இயற்றி வேலைகளைச் செய்யவும், வரவு-செலவு கணக்குகளை முறையாக மன்றக்கூட்டத்தில் வாசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் பெரணமல்லூர் சேகரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் மாரி முத்து, ஆரணி வட்டார செயலாளர் சி. ரமேஷ்பாபு, சேத்துப்பட்டு வட்டார செயலாளர் எல்லப்பன், வந்தவாசி வட்டார செயலாளர் அப்துல் காதர், போளூர் வட்டார செயலாளர் ரவிதாசன், பேரூராட்சி கவுன்சிலர் மா.கௌதம்முத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்ட முடிவில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, மன்றக் கூட்டத்தில் மக்கள் கோரிக்கை குறித்து சிபிஎம் கவுன்சிலர் பேச முழுமையாக அனுமதிக்கப்படும் என்றும் அவரது கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றி செயல்பாட்டுக்கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.