districts

கோவிலில் கல்வெட்டு எழுத்துக்கள் தமிழில் மொழிபெயர்த்து பலகைகள்

மாமல்லபுரம் , ஏப். 27- மாமல்லபுரம் கடற்கரை கோவிலில்  இருக்கும் பழங்கால சோழர் காலத்து  தமிழ் கல்வெட்டு எழுத்துக் களின் அர்த்தங்களை மொழி  பெயர்த்து, தமிழில் விளக்க  பலகைகளை மத்திய தொல்லியல் துறை வைத் துள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள  புராதன சின்னங்களில் ஏராள மான கல்வெட்டு எழுத்துக் கள் தமிழ் எழுத்துக்கள் போல் இல்லாததால் கல்வெட்டுக்களில் எழுதி இருப்பது என்ன என்று தெரி யாத நிலை உள்ளது.  கல்வெட்டு பற்றிய குறிப்புகளும் புராதன சின்னங்கள் அருகே வைக் கப்படாததால் சுற்றுலா பயணிகள் எதுவும் தெரியா மல் பார்த்து செல்லும் நிலையே நீடித்து வருகிறது.  இந்நிலையில் கல்வெட்டுக் களில் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றிய குறிப்புகளை அனை வரும் அறியும் வகையில் குறிப்புகள் வைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் முதல் முறையாக அங்குள்ள  கல்வெட்டுகளில் இருக்கும் பழங்கால சோழர் காலத்து  தமிழ் கல்வெட்டு எழுத்துக் களின் அர்த்தங்களை மொழி பெயர்த்து, தமிழில் விளக்க போர்டுகளை மத்திய  தொல்லியல் துறை வைத்துள்ளது. இதேபோல் ஐந்துரதம், அர்சுனன் தபசு, வெண்ணை உருண்டை கல் போன்ற புராதன சின்னங்கள் பகுதி யிலும் விளக்க தகவல் போர்டுகள் வைக்க வேண் டும் என்று சுற்றுலா பயணி கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.