சென்னை, ஜூலை 27-
சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளை விசாரிக்க புதிய புலன் விசாரணைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார்.
சென்னை பெருநகர காவல் நிலை யங்களில் உள்ள முக்கிய வழக்குகளை விசாரிக்கவும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சென்னை பெருநகர காவலில் உள்ள 12 காவல் மாவட்டங்களில், 12 புலன் விசாரணை பிரிவு காவல் நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளது.
புதிதாக தொடங்கப்பட்ட புலன் விசா ரணை பிரிவு காவல் நிலைய காவல் அதிகாரி கள் மற்றும் ஆளிநர்களுக்கான 3 நாட்கள் பயிற்சி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் வியாழனன்று (ஜூலை 27) காவல் ஆணையரகத்தில் துவக்கி வைத்தார்.
இப்பயிற்சி முகாமில், சட்ட வல்லுநர் கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அரசு வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற மூத்த அரசு வழக்கறிஞர்கள், தடய அறிவியல் துறை நிபுணர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, வழக்கு விசா ரணை தொடர்பான புதிய யுத்திகள், விசா ரணை கையாளும் முறை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கினர்.
இந்த புலன் விசாரணை பிரிவு காவல் நிலையங்கள் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சென்னை பெருநகர காவலில் உள்ள 12 காவல் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் செயல்படும் என்றும், இப்பிரிவினர் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளான கொலை, ஆதாயக் கொலை, கொள்ளை, வழிப்பறி, சந்தேக மரணம், ஆள்கடத்தல், வெடிபொருள் வழக்கு, சாதி, மத மோதல் வழக்குகள் மற்றும் காவல் ஆணையர் குறிப்பிடும் வழக்குகளை விரைந்து விசாரணை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள் என காவல் ஆணையர் தெரிவித்தார்.