districts

img

வீனஸ் மழலையர் பள்ளிகளில் குருளையர் இயக்கம் துவக்கம்

சிதம்பரம், நவ. 13- வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பாரத சாரண-சாரணிய குருளையர் மற்றும் நீலப்பறவை யர்  அமைப்பு துவக்க நிகழ்ச்சி நடை பெற்றது.  விழாவிற்கு பள்ளியின் தாளாளரும் பாரத சாரண-சாரணிய அமைப்பின் சிதம்பரம் கல்வி மாவட்டத்தின் தலை வருமான எஸ்.குமார் தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தினர்களாக சிதம்பரம் கல்வி மாவட்டத்தின் சாரண அமைப்பு ஆணையர் வேலாயுதம் மற்றும் செயலாளர் பாக்கியராஜ்,  வீனஸ் மேல்நிலைப் பள்ளியின் சாரணிய பிரிவின் ஆசிரியை ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் நிர்வாக அலுவலர் ராஜ லட்சுமி அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் முதல்வர் ரூபியா ராணி மற்றும் அம்மாபேட்டை மழலையார் பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.