சென்னை, நவ.22- டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவ மனையின் குழந்தை வளர்ச்சி மையம், “நரம்பியல் பிரச்சினைகளுடைய குழந்தைகளைக் கொண்டாடுதல்” என்ற தலைப்பிலான கருத்தரங்கை அண்மையில் நடத்தியது. இந்தக் கருத்தரங்கிற்கு மருத்துவமனை யின் தலைவரான டாக்டர் டி. ஜி. கோவிந்த ராஜன், இயக்குநர்கள் டாக்டர் ஜெயந்தி கோவிந்தராஜன், டாக்டர் சிவரஞ்சனி கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நரம்பியல் பிரச்சினைகள் இன்று வளர்ந்து வரும் சவாலாகவும், குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் திறன்வாய்ந்த பங்கு, சுய கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை விளக்கும் தலைப்புகளில் சிறப்பு அமர்வு கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து நிபுணர்களுடனான குழு கலந்துரையாடல் மற்றும் கூடியிருந்த பெற்றோரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அமர்வு நடத்தப்பட்டது. குழந்தை வளர்ச்சி மையத்தின் தலைமை ஆலோசகரும், குழந்தை மருத்துவப் பிரிவின் தலைவருமான டாக்டர். ராஜேஸ்வரி பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளில் பிறக்கும் 6 குழந்தை களில் ஒருவர் நரம்பியல் பன்முகத் தன்மை கொண்டவராகவும், 36 குழந்தை களில் ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட வராகவும் இருக்கிறார்கள் என்றார். இந்த குழந்தைகளுக்கு உணர்ச்சிப் பிரச்சினை கள் உள்ளன. ஆட்டிசம் உள்ள 30 விழுக்காடு குழந்தைகளுக்கு வலிப்புப் பிரச்சி னையும் உள்ளது. அதே நேரத்தில் இந்தக் குழந்தை களுக்கும் தனித்துவமான திறமைகள் உண்டு. அவர்கள் ஆர்வமுள்ள பிரிவில் கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் சிக்கலான சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை அவர்களால் வழங்க முடியும். சில குழந்தைகள் இசை, கலை, அறி வியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வலு வான திறன்களைக் கொண்டுள்ளனர். பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளின் ஆரம்ப கால தலையீடு மற்றும் போதுமான ஆதர வுடன் இத்தகைய திறமைகளை அவர்களிடம் வளர்த்தெடுக்க முடியும்” என்றார் அவர்.