140 ஏரிகள் முழுமையாக நிரம்பியது
செங்கல்பட்டு, நவ.17- தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 1022 ஏரிகளில் 140 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஐந்து மாவட்டங்களில் உள்ள 1022 ஏரிகளில் 140 ஏரிகள் முழு கொள்ளளவையும், 187 ஏரிகள் 76 முதல் 99 விழுக்காடும், 278 ஏரிகள் 51முதல் 75 விழுக்காடும், 301 ஏரிகள் 26 முதல் 50 விழுக்காடு நிரம்பியுள்ளது.
சென்னையில் அதிகரிக்கும் இன்புளுயன்சா காய்ச்சல்
சென்னை, நவ. 17- சென்னையில் பெரும்பாலான மருத்துவமனைகளில் ஏராளமானோர் காய்ச்சல் சிகிச்சைக்காக வந்து கொண்டிருக்கிறார்கள் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மழைக் காலங்களில் ஏற்படும் நோய்கள் ஆண்டு தோறும் செப்டம்பர் முதல் ஜனவரி வரை சென்னையை பொறுத்தவரை வழக்கமாக இருக்கும். குறிப்பாக மழைக் கால மாதங்களான அக்டோபர், நவம்பர் மாதங்களில் நோய் அதிகரித்து காணப்படும். அதேபோல் இந்த ஆண்டும் சென்னையில் காய்ச்சல் அதிகளவு காணப்படுகிறது என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. வைரஸ் மூலமும், கொசுக்கள் மூலமும் காய்ச்சல் பரவி வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 300 பேரின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் இன்புளுயன்சா காய்ச்சல் அதிகளவு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் இன்புளுயன்சா-ஏ வகை காய்ச்சல் தான் அதிகமானோரிடம் காணப்படுகிறது. உடல் வலி, அதிகமான காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இந்த காய்ச்சலின் அறிகுறியாக இருக்கும். மேலும் இந்த காய்ச்சல் ஒருவருக்கு அதிகரிப்பதை பொறுத்து மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அதாவது, லேசான காய்ச்சல், தொண்டை வலி இருப்பவர்களுக்கு சாதாரண முறையில் சிகிச்சை அளிக்கப்படும். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகளை இந்த காய்ச்சல் தாக்கினால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மூன்றாவதாக அதிகமான காய்ச்சல், சளி, தொண்டை வலி, வாந்தி ஆகிய அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இந்த காய்ச்சல் பாதித்தவர்கள் நன்றாக ஓய்வு எடுப்பது அவசியம். மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. காய்ச்சல் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் குறையாமல் இருந்தால் மருத்துவர்களை அணுகுவது சிறந்தது என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
பைக் சாகசம் செய்த இளைஞர் கைது
செங்கல்பட்டு, நவ.17- தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசம் செய்து இணையத்தில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்படார். செங்கல்பட்டு மாவட்டம் , செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மறை மலைநகரைச் சேர்ந்த கோகுல் ( 21 ) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி பைக் ஸ்டண்ட் செய்துள்ளார்.அந்த வீடியோ கடந்த 16 தேதி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக பைக் ஸ்டண்ட் செய்த நபர் மீது செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது . இவ்வழக்கு சம்மந்தமாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இரு சக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட கோகுல் என்பரை காவல் துறையினர் வெள்ளி யன்று (நவம்பர் 17) கைது செய்தனர். மேலும் பைக் ஸ்டண்ட் செய்ய பயன்படுத்திய அவரது இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி , செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். மேலும் , இது போல் இரு சக்கர வாகன சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம்: சிபிஎம் கண்டனம்
திருவண்ணாமலை,நவ.17- திருவண்ணாமலை மாவட்டத்தில் அமையவுள்ள மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றி யத்தில் சிப்காட் 3 ஆவது அலகு விரி வாக்கம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிப்காட் விரிவாக்கத்திற்கு மேல்மா, தேத்துறை, வீரம்பாக்கம் வட ஆணாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் குரும்பூர், காட்டு குடிசை, நெடுங்கல், மற்றும் நர்மாபள்ளம், உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் வேளாண் நிலம் கையகப்படுத் தப்பட உள்ளது. இந்த நிலங்கள் தரிசு என அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இந்த நிலங்களில் நெல், கரும்பு, கேழ்வரகு, மணிலா, பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரி வித்துள்ளனர். அரசால் கையகப்படுத்தப்பட உள்ள இந்த நிலங்கள் வேளாண் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலம் என, தெரி விக்கும் அப்பகுதி கிராம விவசாயிகள் மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவ சாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் 120 நாட்கள் கடந்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க சென்றனர். ஆனால், அதற்கு அனுமதி மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை, கோவை, கடலூர், மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட வெவ்வேறு சிறை களில் அடைக்கப்பட்டனர். கடுமையான தேச துரோக வழக்கு குற்றவாளிகள் என்று ஆங்கி லேயர் ஆட்சி காலங்களில் அடை யாளப்படுத்தப்பட்டவர்கள் தான் இவ்வாறு ஒரே வழக்கில் கைது செய்து வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். இத்தகைய நடைமுறை தற்போது நடந்துள்ளது. இவர்களில் 7 பேர் மீது நவ.15 அன்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நிலத்தை பாதுகாக்க போராடிய விவசாயிகளை அழைத்து பேசாமல், அடக்குமுறைகளை ஏவுவதை மார்க்சிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. அடக்குமுறைகளை கைவிட்டு, விவ சாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து, அவர்களை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு: இன்று முன்னோட்ட கருத்தரங்கம்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு: இன்று முன்னோட்ட கருத்தரங்கம் கள்ளக்குறிச்சி, நவ.17- அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முன்னோட்ட கருத்தரங்கம் (நவ.18) சனிக்கிழமை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு வருகிற ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் நிகழ்வாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு கருதப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரத்தை எட்டுவதை நோக்கிய தமிழ்நாடு அரசின் தளர்வறியா பயணத்தில் முக்கிய படிநிலை இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடாகும். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோட்டமான கருத்தரங்கம் சனிக்கிழமை (நவ.18) 10 மணிக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை வகிக்கிறார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வகிக்கிறார்கள். இக்கூட்டத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொழில் வணிக நிறுவன சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
நில ஆக்கிரமிப்பு புகாருக்கு ஆதாரம் என்ன? நீதிமன்றம்
சென்னை,நவ.17- சென்னை உயர் நீதி மன்றத்தில், திருவண்ணா மலை யைச் சேர்ந்த டி.எஸ். சங்கர் என்ப வர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மாத்தூரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா தலைவராக உள்ள திருவண்ணாமலை சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை ஆகிரமித்து, பொறியியல் கல்லூரி கட்டியுள்ளது. ஆக்கிரமித்த நிலத்துக்கு பட்டா வாங்கி கல்லூரி தொடங்க அனுமதி பெற்றுள்ளனர். அரசியல் அதிகாரம் கொண்டவர் என்பதால் அரசு நிலத்தை வாங்கி அதில் கல்லூரி கட்டியுள்ளனர். எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளதால், கல்லூரி கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென கடந்த மாதம் மத்திய கல்வி அமைச்சகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தேன். அந்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.உமா மகேஸ்வரி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது என கேள்வி எழுப்பினர். பின்னர், அதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அண்ணா பல்கலையில் பழைய தேர்வு கட்டணம்: அமைச்சர் தகவல்
விழுப்புரம், நவ.17- அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த பருவத் தேர்வு வழக்கம் போல் பழைய கட்ட ணம் வசூலிக்கப்படும் என அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு மாண வர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அண்ணா பல்கலைக்கழகம் இந்த பருவ தேர்வு கட்டணம் ரூ.150- விருந்து 225-ஆக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த ஆண்டு வழக்கம் போல் பழைய தேர்வு கட்டணம் வசூலிக்கப்படும் . அடுத்த ஆண்டு அனைத்து பல்கலைக் கழகங்களை அழைத்து பேசி ஒரே தேர்வு கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மற்ற பல்கலைக்கழகங்களில் தகுதி இல்லாமல் உதவி பேராசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள் என சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகம் சார்பில் புகார் தெரிவித்தால் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.