districts

கடலூரில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

கடலூர், ஜூலை 31-

     கடலூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா திங்களன்று (ஜூலை 31) நடைபெற்றது.

     கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை வகித்து 149 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். துணை மேயர் பா.தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார். கடலூர் திமுக மாநகரச் செயலர் கே.எஸ்.ராஜா,  மண்டல குழு தலைவர் பிரசன்னா, வார்டு உறுப்பினர் சுபாஷ்ணி ராஜா, திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.